கிரிக்கெட் வாரிய கருத்துக்கு சி.பி.ஐ. கண்டனம்
டெல்லி:
சி.பி.ஐ.யின் அறிக்கையை தரக் குறைவாக விமர்சித்த கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருக்கு சி.பி.ஐ.அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக விசாரணை செய்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் கிரிக்கெட் வாரியத்தின்செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. சி.பி.ஐ. யின் கருத்துக்கள் ஒவ்வொன்றிற்கும்கிரிக்கெட் வாரியம் பதிலளித்திருந்தது.
கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான கமல் மோரார்கா சி.பி.ஐ.யின் அறிக்கை விபச்சாரியின் டைரி போல்இருந்தது என கூறியிருந்தார்.
இவரது பேச்சு சி.பி.ஐ. அதிகாரிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள்கருத்து தெரிவிக்கையில், மோரார்காவின் பேச்சு தேவையற்றது. நாங்கள் எங்கள் கடமையை எந்த வித பாகுபாடும்இன்றி நிறைவேற்றியிருக்கிறோம்.
கிரிக்கெட் வாரியத்தின் இது போன்ற அறிக்கைகள் யாரையோ பாதுகாப்பதற்காக வெளியிடப்படுவது போல்தெரிகிறது.
சி.பி.ஐ. யை ஊழல் அமைப்பு எனவும் மோரர்கா தெரிவித்துள்ளார். காற்று வாக்கில் இவர்கள் கூறுவதை வைத்துஎந்த வழக்கும் தொடர முடியாது. யார் ஊழல் செய்தார்கள் என குறிப்பிட்டு கூறினால் அவரை கோர்ட்டுக்குஇழுப்போம் என்றனர்












Click it and Unblock the Notifications