வேலை நிறுத்தத்தில் 6 லட்சம் ஊழியர்கள்
டெல்லி:
தபால் ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
6, 00,000 க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும்தபால் சேவைகள் கடுமையாக ஸ்தம்பிக்கப்பட்டன.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தபால் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தைத்தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் ஆங்காங்கே கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டு வேலை நிறுத்தம்குறித்து அவர்களுக்கு உடனுக்குடன் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்கள் சம்மேளனத் தலைவர்கள் கூறுகையில், காலை 6 மணி முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள்வேலை நிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தம் 100 சதவீதம் வெற்றி பெறும் என நம்பலாம் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.
தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சந்திரன் பிள்ளை கூறுகையில், அனைத்து நகரங்களிலும்தலைமைத் தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றார்.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துடன் தபால் ஊழியர்கள் சம்மேளனம் நடத்திய பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்ததையடுத்து வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
யு. என். ஐ.