For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமருக்கு முரசொலி மாறன் கண்டனக் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எம்.பிக்கள் தொகுதி எண்ணிக்கை தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புதெரிவித்து பிரதமர் வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கடிதம்எழுதியிருக்கிறார்.

பிரதமர் வாஜ்பாய்க்கு முரசொலி மாறன் எழுதியுள்ள கடிதத்தில், பாராளுமன்றதொகுதிகளின் எண்ணிக்கையில் 2026 - ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் இல்லைஎன்ற நிலையில் இருந்து விலகி

2011- ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் இருக்காது என்றும் இப்பொழுது இருக்கும்நிலையே 2011-ம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்றும் மத்திய அரசு பரிசீலித்துவருவதாகத்தெரிகிறது.

இந்த முடிவு தென் மாநிலங்களின் குறிப்பாக தமிழ்நாட்டின் நலனை வெகுவாகபாதிக்கும். குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக தமிழ்நாடு அல்படுத்திவருகிறது.

இதனால் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் அரசுக்கு அவப்பெயர் தான் ஏற்படும்.

ஏற்கனவே, கடந்த 1974-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் 50 ஆண்டுகளுக்குபாராளுமன்ற தொகுதிகளில் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்று எதிர் கட்சிசார்பில் தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

அதை அப்பொழுதைய ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.

பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026 -ம் ஆண்டு வரை மாற்றம்இல்லை என்ற முடிவை மாற்ற வேண்டாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிபிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும்நினைவுபடுத்த விரும்புகிறோம்.

2011-ம் ஆண்டிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றிஅமைக்கும் முடிவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மத்திய அரசு இதை நிராகரித்தால் அது ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாககஇருக்கும். வடக்கு- தெற்கு என்ற பாகுபாட்டையும் உருவாக்கிவிடும்.

எனவே தேசிய நலன் கருதி மத்திய அமைச்சரவையின் முடிவிலும், அனைத்துக்கட்சிகளின் உடன் பாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் மத்திய அமைச்சர் மாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X