தேனி ஜெயக்குமாருக்கு புலிகளுடன் தொடர்பு?
புதுவை:
புதுவை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவை அமைச்சர் ஒருவருக்கு புலிகளுடன் தொடர்புஉள்ளது என்று தெரிவித்தார். ஆனால் அப்போது அந்த அமைச்சர் யார் என்று கூற மறுத்து விட்டார்.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுடன், அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இது தொடர்பாக என்னிடம் இருந்த ஆதாரங்களை யார் யாரிடம்கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்து விட்டேன். இதன் மூலம் தார்மீக அடிப்படையில் நான் எனது கடமையை செய்து முடித்து விட்டேன் என்றுநம்புகிறேன்.
இதற்கு மேல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முழுப் பொறுப்பாகும். இதனால் கூட்டணி பாதிக்குமா? ஆட்சிபறிபோகுமா? போன்றவை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களின் பாதுகாப்பை விட அரசியல் எனக்கு முக்கியமில்லை என்று கூறியுள்ளார் கண்ணன்.