ஐ.சி.சி. அதிகாரிகளை சந்திக்க பிரபாகர் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Prabhaharகிரிக்கெட் ஊழல் தொடர்பாக விசராணை நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ( ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு குழுவினரை சந்திக்க மனோஜ் பிரபாகர்மறுததுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மனோஜ் பிரபாகர்தான் என கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு சூதாட்ட ஏஜென்டுகளை அறிமுகம் செய்து வைத்தவரும் பிரபாரகர்தான் எனவும் தெரிய வந்தது. இதற்காகஅவர் கமிஷன் பெற்று வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

7 பேர் குழு:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவு, சர்வ தேச கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்திவருகிறது. இது குறித்து பிரபாகரிடம் விசாரணை நடத்துவதற்காக மார்டின் ஹாகின்ஸ், ஆலன் பீக்காக், ராபர்ட் சுமான்னி அடங்கிய 3 பேர் கொண்ட குழுடெல்லி வந்தனர்.

இவர்கள் பிரபாகர் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரலாம் என கேட்டனர். பிரபாகர் அவகர்களைசந்திக்க மறுத்துவிட்டார்.

பிரபாகர் இது குறித்து கூறுகையில், ஐ.சி.சி அதிகாரிகள் என்னோடு தொலைபேசியில் பேசிய போது நான் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் தான்அவர்களை சந்திப்பேன் என கூறினேன். நான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலளிக்க கடமைப்பட்டவனே தவிர ஐ.சி.சி.க்கு அல்ல என்றார்.

ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழுவின் ஹக்கினஸ் கூறியதாவது:

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக அனைத்து விவரங்களையும் சேகரிக்க நாங்கள் வந்திருக்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடத்தியஅதிகாரிகளையும், ஊழலில் சம்பந்தப்பட்டவர்களையும் சந்திக்க இருக்கிறோம்.

சி.பி.ஐ. இணை இயக்குநர் சவானி தலைமையிலான அதிகாரிகள் குழுவினரை சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினோம் என்றார். இவர்கள்அஜய்ஷர்மாவிடமும் விசாரணை நடத்தவிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+