அரசியலுக்கு வருவார் பிரியங்கா: சோனியா சூசகம்
லக்னோ:
பிரியங்கா காந்தி விரைவில் அரசியலில் குதிப்பார் என்று சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சூசகமாகத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான அமேதியிலும், மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின்ரேபரேலி தொகுதியிலும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது அவர் பொதுக்கூட்டங்களிலும், காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
ஊழியர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது, பிரியங்காவைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்த வேண்டும் என்று சோனியா காந்தியிடம்பகிங்கரமாக சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்தனர். ரானிகஞ்ச் என்ற கிராமத்தில் நடந்த ஊழியர்கள் கூட்டத்திலும் இதே போல்வலியுறுத்தப்பட்டது.
அதற்கு சோனியா காந்தி பதில் அளிக்கும்போது, உங்கள் விருப்பம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். கட்சி தொண்டர்களின் கோரிக்கையை என்குடும்பம் அதிக காலம் அலட்சியம் செய்யாது என்றார்.
அதாவது பிரியங்காகாந்தி விரைவில் தீவிர அரசியலில் குதிப்பார் என்பதை சோனியா காந்தி சூசகமாக தெரிவித்தார்.
இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகிலேஷ் சிங்கிடம் கருத்து கேட்ட போது, பிரியங்கா அரசியலுக்கு வருவதை சோனியா விரும்பவில்லை என்றுஒரு பேச்சு நிலவுகிறது. அந்தக் கற்பனை செய்திக்கு சோனியா காந்தியே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.












Click it and Unblock the Notifications