For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜினாமாவை வாபஸ் பெற்றார் மம்தா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பஞ்சாபில் நடந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தனதுபதவியை ராாஜினாமா செய்திருந்தார். பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டதின் படி தனது ராஜினாமாவை வாபஸ்பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் சராய் பஞ்சாரா அருகே சனிக்கிழமை தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயில் மீது ஹவுரா மெயில்மோதி விபத்துக்குள்ளானது. இநத் விபத்தில் 43 பேர் இறந்தனர். 145 பேர் காயமடைந்தனர்.

இந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து மம்தா பானர்ஜிதனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார். பிரதமர் மம்தாவின் ராஜினாவை ஏற்கமறுத்துவிட்டார்.

பிரதமர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பிய கடிதத்தில், மம்தா பானர்ஜி தனது ராஜினாமா வை திரும்பப் பெறவேண்டும்.

ரயில்வே துறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அனைத்துமுயற்சிகளுக்கும் மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என கூறியிருந்தார்.

பிரதமரின் கடிதத்தை ஏற்றுக் கொண்டு ராஜினாவை திரும்ப பெற்ற மம்தா தெரிவித்தாவது:

பிரதமரின் கோரிக்கைக்கு ஏற்ப எனது ராஜினாவை வாபஸ் பெறுகிறேன். ரயில்வேயில் பாதுகாப்பை பலப்படுத்தஅனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வேன். அது குறித்து பிரதமருடன் கலந்து பேசுவேன். ரயில்வே துறையில்எங்கு எந்த விதமான குறைகள் இருந்தாலும் அதை நீக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் வருவதால் என் துறையில் அதிக கவனம் செலுத்துவதில் எந்த பாதிப்பும் ஏற்படாதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X