செங்கோட்டையன் மீதான வழக்கில் இறுதி வாதம் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில் இறுதி வாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அண்ணா போக்குவரத்துக் கழக ஊழல் வழக்கு இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்செவ்வாய்கிழமை முதல் வக்கீல்களின் இறுதி வாதம் தொடங்கியது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளதாக அரசுதரப்பு வக்கீல்கள் நிருபித்துள்ளதாக கூறினர். தனது வாதத்தில் அரசு தரப்பு வக்கீல் ராமசாமி தெரிவித்ததாவது:

அண்ணா போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பணியாறிய பரமசிவத்துடன் சேர்ந்து அண்ணாபோக்குவரத்து கழகத்திற்கு தேவையான உதிரி பாகங்கள், பாடிகிட்டுகள் வாங்குவதிலும், டிக்கெட்டுகள்அச்சிடுதலிலும் முறை கேடுகள் செய்துள்ளனர்.

சப்ளை ஆர்டர்கள் கொடுக்க கமிஷன்கள் பெற்றுள்ளனர். இவை அனைத்தும் பல்வேறு அரசு சாட்சிங்கள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது. கமிஷன் தொகைகள் மூன்றாவது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கோபி நடராஜன்முலம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நிர்வாக இயக்குனர் பரமசிவம் தொலைபேசி மூலம் சப்ளையர்களிடம் மூலம் பேசியதற்கானஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வாறு கமிஷன் பெற்றனர் என்பவைசாட்சிகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முதல் எதிரி செங்கோட்டையனும், இரண்டாவது எதிரி எழிலும் பொது ஊழியர்களாக இருந்து தங்கள்அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லாபம் சம்பாதித்துள்ளனர். இவை அரசு தரப்பு சாட்சிகள் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப சூழ்நிலையையும், சாட்சிகளையும் வைத்து பார்க்கும் போது செங்கோட்டையன், எழில், கோபி நடராஜன்ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பினரால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

அண்ணா போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக இருந்த பரமசிவம் தற்போது உயிருடன் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+