காஷ்மீர் பிரச்சனை: முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒருபோதும்சம்மதிக்காது என்று இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றுபாகிஸ்தான் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது.
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வந்தால் பாகிஸ்தானையும் அந்தப் பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சனையில் மேற் கொண்டுள்ள முயற்சி போற்றத்தக்கது.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் அமைதியும், மாமுல் வாழ்க்கையும் ஏற்படும். அவர் சமீபத்தில் போர்நிறுத்தத்தைஅறிவித்துள்ளார்.
இதன்படி இந்திய வீரர்கள் தாக்குதலைக் கைவிட்டுள்ளார்கள். அதே சமயம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தடுத்துநிறுத்தப்படும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால் பிரச்சனை தீரமுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறுகிறது. இதற்கு இந்தியா ஒருபோதும்அடிபணியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications