கடலூர்: புயலில் இறந்தோர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புயலால் இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு ரூ 15, ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக்கலெக்டர் சந்தீப் சக்சேனா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் புயல் - மழைக்கு 5 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேரின் குடும்பத்துக்கு ரூ 15, 000வழங்கப்பட்டுள்ளது. இறந்த ஒருவரது உறவினர் நஷ்டஈட்டுத் தொகையை வாங்க மறுத்து விட்டார்.
புயலால் வீடு முழுவதும் இடிந்து விழுந்த 91 குடும்பங்களுக்குத் தலா ரூ 1000 வழங்கப்பட்டுள்ளது. பாதி வீடுஇடிந்து விழுந்த 362 குடும்பங்களுக்கு தலா ரூ 500 ம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ 2, 72,000செலவிடப்பட்டுள்ளது.
இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவைவழங்கப்பட்டன.
மின்சார வசதி:
புயலால் மின்சாரத் தடை ஏற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக திருச்சி,திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து மின்வாரியத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications