For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லீம் வழிபாட்டு மைய கோபுரம் உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் இஸ்லாமிய வழிபாட்டு மைதானத்தின் கோபுரங்களை (மினார்) விஷமிகள் சேதப்படுத்தியதால்அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. ஜமா-அத் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

தமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்திலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.

ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, அங்கு அதிகாலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.சத்தியமங்கலத்தில் உள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில், ரம்ஜான் உட்பட விசேஷ பண்டிகை நாட்களில்தொழுகைகள் நடக்கும்.

இதையொட்டி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக இந்த மைதானத்திற்கு முஸ்லிம்கள் செல்வர். இந்தமைதானத்தில் இதற்கென மினார் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 கோபுர மினார்கள் உள்ளன. இதில் இரண்டைடிசம்பர் 6ம் தேதி அதிகாலையில் விஷமிகள் உடைத்துள்ளனர்.

இந்த தகவலை காலையில் அறிந்த இப்பகுதி மக்கள், ஒன்று திரண்டனர். ஜமா-அத் தலைவர் அமனுல்லாதலைமையில் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

பின்னர், மாலையில் ஒன்று கூடி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.தாசில்தார் காதர் உசேன், டிஎஸ்பி குப்புசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதி மொழியின்பேரில்சாலை மறியல் கைவிடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X