பின்வாங்கினார் வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தி கோயில் தொடர்பாக புதன்கிழமை தான் தெரிவித்த கருத்திலிருந்து பிரதமர் வாஜ்பாய் பின் வாங்கிவிட்டதாகத்தெரிகிறது.
இது தொடர்பாக அவரை தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.
அவர்களிடம் பேசிய வாஜ்பாய், தேசிய ஜனநாயக முன்னணியின் செயல் திட்டத்துக்கு மாறான பாதையில் அரசு செல்லாது எனஉறுதியளித்துள்ளாார். இத் தகவலை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. எர்ரன் நாயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.
பல கட்சிகளை அடக்கிய கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் பிரதமர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. தேசிய ஜனநாயகக்கூட்டணியில் செயல் திட்டத்தில் அயோத்தி கோவில் குறித்து எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது கோயில் கட்டும் பணிஇன்னும் முடியாமலேயே உள்ளது என்ற ரீதியில் பிரதமர் பேசியது சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இப்போது வாஜ்பாய் எங்களுக்கு இந்த விஷயத்தில் உறுதிமொழி அளித்துவிட்டார். செயல்திட்டப்படி தான் செயல்படுவோம் எனஅவர் கூறினார் என்றார் நாயுடு.
முன்னதாக பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில்சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு இனி பாதுகாப்பு இருக்காது என சீக்கியத் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மானும்கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications