காங்கிரசுக்கு பா.ஜ.கவின் 3 கேள்விகள்
டெல்லி:
பாபர் மசூதி- அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் பாரதீய ஜனதாவுக்கு கடும் தலைவலி கொடுத்து வரும் காங்கிரசுக்குபா.ஜ.க. 3 முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
பா.ஜ.கவின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமண் இந்தக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
- .பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை திறந்தது யார்?
- .பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் சிலை வைக்கவும், கோவில் கட்ட அடிக்கல் நாட்டவும் அனுமதி அளித்தது யார்?
- .உடைக்கப்பட்ட மசூதிக்கு அருகே தாற்காலிகமான கோவிலைக் கட்டியது யார்?
உண்மை இப்படி இருக்க ராஜிவின் மனைவியான சோனியா காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து கொண்டு இந்தநாட்டின் முஸ்லீம்களையோ, இந்துக்களையோ ஏமாற்றிவிட முடியாது. மசூதியை உடைக்க ராவ் தான் காரணம் என காங்கிரஸ்தலைவர் அர்ஜூன் சிங்கே அப்போது குற்றம் சாட்டியதையும் யாரும் மறந்துவிட முடியாது.
ஆனால், இப்போது அத்வானியை ராஜினாமா செய்யச் சொல்கிறது காங்கிரஸ். அயோத்தி விவகாரம் ஒரு அரசியல் இயக்கம்.ஒவ்வொரு கட்சியும், தலைவரும் ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தில் பங்கேற்று இருப்பார்கள். ஆனால், இதை வைத்தே அவரைபதவி விலகச் சொல்லிவிட முடியாது என்றார் லட்சுமண்.












Click it and Unblock the Notifications