அசாம்: உல்பா தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் படுகொலை
கவுஹாத்தி:
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் 28 பேரைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலில் 16பேர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலத்தின் மியான்மர் பகுதியில் இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை நடந்தது. இறந்தவர்கள்அனைவரும் ஹிந்தி மொழி பேசுபவர்கள். வியாபாரிகள் என்று தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 6 வாரங்களில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாகும் இது. அசாமின் கிழக்கு தின்சூகியா மாவட்டம் பகுதியில்இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது. தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களிலிருந்துவந்தவர்கள்.
மூன்று லாரிகளில் பிகார் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் குக்குர்மாரி பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த உல்பா தீவிரவாதிகள் அந்த 3 லாரிகளையும் வழிமறித்து அவர்களை நோக்கிச்சராமரியாகச் சுட்டனர். பின்னர் அங்கிருந்த அடர்ந்த காட்டுக்குள் புகுந்து தப்பியோடி விட்டனர். போலீஸார்இத்தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications