தேவாலயத்தை அனுமார் கோவிலாக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத்தில் தேவாலயத்தை அனுமார் கோயிலாக்க முயன்றதை கண்டித்து சென்னையில் வெள்ளிக்கிழமைகிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.

குஜராத் மாநிலம் சிந்தியா என்ற கிராமத்தில் பழங்குடி கிறிஸ்தவர்களின் தேவாலயம் உள்ளது. கடந்த வாரம் சிலர்அந்த ஆலயத்தை அனுமார் கோயிலாக்க முயன்றனர்.

இதைக் கண்டித்து பேராயர் எஸ்றா சற்குணம், குஜராத்தில் உண்ணா விரதம் இருந்தார். அவரை போலீஸார் கைதுசெய்தனர்.

இவற்றை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக திராவிட ஆன்மீக இயக்கம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அதன் நிறுவுனர் டாக்டர்தெய்வநாயகம் முன்னதாகவே கைது செய்யப்பட்டார்.

இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் சென்ட்ரல் ரயில் நிலையம் முன் ஆர்பாட்டம் நடத்தினர். இதற்குஇந்திய சமூக நீதி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மரியசூசை தலைமை தாங்கினார்.

இதில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+