For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய்க்கு நாயுடு கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பிரதமர் வாஜ்பாய் கூறிய கருத்துக்கள் தேவையில்லாதது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும். வேறு இடத்தில் பாபர் மசூதி கட்ட அனுமதிக்கப்படும். அயோத்தியில்ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒரு தேசிய உணர்வு என்று கூறியுள்ளார்.

அயோத்தி பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் என்ன கூறுகிறதோ அதைத் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் பிரச்சனை இருக்கும் போது, பிரதமர் வாஜ்பாய் உள்பட யாருக்கும் அயோத்தி பிரச்சனைகுறித்துக் கருத்துக் கூற உரிமை இல்லை.

அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் இந்த நேரத்தில் பேசியது தவறு. அயோத்தி பிரச்சனையில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் உள்பட யாருமே கருத்துக் கூறுவது தவறுஎன்றார் சந்திரபாபு நாயுடு.

இதற்கிடையே வியாழக்கிழமை மாலை தெலுங்கு தேச எம்.பி.க்கள், பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசினர்.அவர்களிடம் வாஜ்பாய் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் திட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரைவுத்திட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X