கோவை மலைப்பகுதியில் வீரப்பன்?
கோவை:
கோவை அருகே உள்ள மலைப் பகுதியில் வீரப்பன் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பையடுத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கோவை நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடமாட்டம் இருப்பதாக நம்பகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. எனவே இந்தப் பகுதியில் உள்ள அதிரடிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே பண்ணாரிக் காட்டுப் பகுதியில் அதிரடிப்படையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வீரப்பன், தனதுஆதரவாளர்களுடன் பண்ணாரிக் காட்டிலிருந்து நீலகிரி மலைப் பகுதிக்குள் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நீலகிரி மாவட்ட எஸ். பி ராமர்த்திதலைமையில் போலீசார் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஆதிவாசிகளிடம் விசாரணை நடத்தினார்.
ஆதிவாசி மக்களிடம் சந்தேகத்தற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளார். மேலும், பந்திப்பூர்,மாயார், தெப்பக்காடு, கக்கநள்ளா போன்ற கிராமங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் மற்றும் ஆதிவாசிகளின் ஒத்துழைப்பையும் அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் நாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications