ஈரோட்டில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கிச் சாவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
சத்தியமங்கலம் அருகே குமிட்டாபுரம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பள்ளியில் தர்மாபுரம் தாமஸ் என்பவரது மகன்கள் இருவர் தங்கிப் படித்து வந்தனர்.மாதேஷ் (12), ராஜூ (10) ஆகிய இ வர்கள் இருவரும் தனது பாட்டி வீட்டிற்குச் செல்வதாகக் கூறி சென்றனர்.
விடுதி இருக்கும் வழியில் குளத்தில் இறங்கி இருவரும் குளித்துள்ளனர். அப்போது குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் கரைக்குத் திரும்பஇயலாமல் தத்தளித்தனர். உதவிக்கு யாரும் கிடைக்காத நிலையில், நீரில் மூழ்கி இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications