கள்ளச்சாராயம்: பெண்கள் படுகொலைக்கு ஜெ. கண்டனம்
சென்னை:
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவடத்தில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த இரு பெண்கள் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடியதால் கொல்லப்பட்டசம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை அங்குள்ள மகளிர் அணியினர் எதிர்த்து போராடி வந்தனர்.இவர்களில் ரத்தனம்மாள் மற்றும் இந்திராணி என்பவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வன்மையாக கண்டித்திருக்கிறார். போலீசார் குற்றவாளிகள் யாராக இருந்தாலும்பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி அரசு கள்ளச் சாராயத்தை தடுக்க தவறி விட்டது. இரு தினங்களுக்கு முன் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய மகளிர் சங்கத்தை சேர்ந்த இரண்டுபெண்களை கள்ளச் சாராய வியாபாரிகள் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிகள் மீது போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் ஆளும் தி.மு.க. வினரின்மிரட்டலுக்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரையில் தி.மு.க.வைச் சேர்ந்த சமூக விரோதிகள் இரண்டு பேர் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய சி.பி.எம். கவுன்சிலர் லீலாவதியை கொன்றுவிட்டனர்.
கடலூர் பகுதியில் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய சி.பி.எம்.ஐச் சேர்ந்த இளைஞர்களும் கொல்லப்பட்டனர்.
இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்











Click it and Unblock the Notifications