காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பேர் காயம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து வரும் வன்முறையில் வெள்ளிக்கிழமை 8 பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஷோப்பியன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த கிரானேட் தாக்குதலில் 8 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் பலரும் தொழுகை முடிந்து பெருமளவில் வந்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில்கலவரம் ஏற்பட்டது.
இந்த கிரானைடு தாக்குதல் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்ததது.
கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது கிரானைடு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த வியாழக்கிழமை கூப்வாராமற்றும் கிஷ்ட்வாராவில் நடந்த கிரானைடு தாக்குகதிலில் 36 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் பின்னர் இறந்து விட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications