தமிழகத்தில் நாளை போலியோ தடுப்பு முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் குழந்தைகளை போலியோவிலிருந்து தடுப்பதற்காக போலியோ தடுப்பு மருந்துஞாயிற்றுக்கிழமை தரப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இருக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை போலியோ நோயிலிருந்து தடுப்பதற்காக கூடுதல்போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை போடப்படுகிறது. இது தமிழக அரசு செயல்படுத்திவரும்போலியோ ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்தகத்தின் இயக்குநர் அய்யாதுரை இது குறித்து கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 40,399 போலியோ சொட்டு மருந்து போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைசத்துணவுக் கூடம், ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள்மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

நடமாடும் தடுப்பு மருந்து கொடுக்கும் வாகனங்கள் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் சுற்றுலாமையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை பயணத்தில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துதருவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

மிக தொலைவில் இருக்கும் மற்றும் வர வசதியில்லாத இடத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகொடுப்பதற்கென நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தமாக 90 லட்சம் டோஸ் போலியோ தடுப்பு மருந்து எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் அடுத்த சுற்று அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் எனகூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+