சபரி மலையில் அன்னதானம் செய்யும் கோவை சாமி
சபரிமலை:
கோவை மாவட்டம் ரத்தினகிரியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தொடர்ந்து சபரிமலையில் 30 ஆண்டுகளாகஅன்னதானம் செய்து வருகிறார்.
வைத்தியநாதனுக்கு வயது 71. அவரது மனைவி பெயர் லட்சுமி. வைத்தியநாதன் கடந்த 1969 ம் வருடம் தனது 25வது ஆண்டு யாத்திரையின் போது அன்னதானம் போது இந்த சேவையைத் தொடங்கினார்.
அந்தக் காலத்தில் பம்பையிலோ அல்லது சன்னிதானத்திலோ உணவு கிடைக்காத நிலை இருந்தது. அப்போது, மகரவிளக்கு நடந்த போது இவர் 100 க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்கினார்.
சுகாதாரமான முறையில் உணவளிக்கும் பொருட்டும் நிரந்தர இடத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடம்அளிக்கப்பட்டது.
அந்த இடத்தில் சத்யாலயம் என்ற பெயர் சூட்டி அன்னதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்செய்கிறேன். அவ்வப்போது தேவஸ்தான அதிகாரிகள் சில பிரச்சனைகளைக் கொடுப்பார்கள். அந்த இடத்தைக்காலி செய்து விட்டு பம்பையில் உள்ள வேறு இடத்துக்குச் செல்லுமாறு கூறினார்.












Click it and Unblock the Notifications