வீரப்பன்: இன்று வந்து இறங்குகிறது 1000 பேர் படை
கோவை:
எல்லைப் பாதுகப்பு படையினர் வருவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு தொழில்நுட்பக்கோளாறு தான் காரணம். வேறு காரணம் கற்பிக்க வேண்டாம் என கோவையில்எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி விஜயகுமார் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பு படைக்கு தலைமை ஏற்று வழி நடத்தவுள்ள ஐ.ஜி, விஜயகுமார்கோவை வந்தார். அவரை ரயில்நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க ஆயிரம் பேர் கொண்ட எல்லைப் பாதுகாப்பு பிரிவு வருகிறது.இந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் விமானத்தில் வருகின்றனர்.
இவர்கள் வர காலதாமதம் ஏற்பட்டதற்கு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலேகாரணம். வேறு காரணங்கள் கற்பிக்க வேண்டாம். மேலும், எல்லைப் பாதுகாப்புபடையினர்ஞாயிற்றுக்கிழமைை வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
எல்லைப் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே வீரபப்னைப் பிடிக்க மேற்கொண்டமுயற்சியில் தோல்வியடைந்தனர் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. எந்த ஒருபடை அமைப்பிற்கும் இந்த நிலை ஏற்படும்.
அதிரடிப்படையிலும் திறமை வாய்ந்த அதிகாரிகள் உள்ளனர். வீரப்பனைப் பிடிப்பதில்உளவுப் பிரிவிற்குத் தான் முக்கிய பங்கு உள்ளது. அதே சமயம் அதிர்ஷ்டம்வேண்டும். அதிரடிப்படை வசம் நவீன ஆயுதங்கள் இல்லை என்பது பற்றி என்னால்கருத்துக் கூற முடியாது.
ரிமோட் சென்சிங் உதவியால் வீரப்பனைக் கண்டு பிடிக்க முடியுமா என்பது பற்றிஆய்வு நடத்தி வருகிறோம்.
நான் காட்டுக்குள் செல்லப் போவதில்லை, எனக்கு ஏன் இவ்வள முக்கியத்துவம்என்பதும் புரியவில்லை என்றார் ஐ.ஜி விஜயகுமார்.












Click it and Unblock the Notifications