பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 மாணவர்கள் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சாய்பாபா காலனியில் குடியிருந்து வருபவர் சரஸ்வதி (39). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது நான்கு பேர் வந்துள்ளனர்.
இவர்களில் மனோஜ் (23), ஜாக்கோப் (22), ஜெயராஜ் (22) ஆகியோர் அடங்குவர். மேலும் செல்வம் (32) என்ற ஆட்டோ டிரைவரும்வந்துள்ளார்.
நான்கு பேரும் சரஸ்வதியை பலவந்தப் படுத்தி கற்பழித்துள்ளனர். இதையடுத்து சரஸ்வதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில்நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நான்கு பேரில் மனோஜ், மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கல்லூரியில் ஏஎம்ஐஇ படித்து வந்துள்ளார். ஜெயராஜ், ஜாக்கோப் ஆகியோர் தனியார்கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications