நிலக்கரி ஊழல் வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலக்கரி இறக்குமதியில் பல கோடிக் கணக்கில் ஊழல் புரிந்தது தொடர்பான வழக்கில், சாட்சிகள் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

நிலக்கரி ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி தார்வேஷ், வழக்கை விசாரிக்க அதிக கால அவகாசம்தேவைப்படுகிறது. இவ்வழக்கில் அதிமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சுந்தரத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.மேலும் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.அதை தற்போது நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+