வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் இந்தியர்கள்
டாக்கா:
இந்தியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பிறப்பிடத்தை விட்டு பல்வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
20-ம் நூற்றாண்டில் மட்டும் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
சர்வ தேச அளவில் மக்கள் தொகை பிறப்பின் சதவிகித்தை விட குடிபெயர்வோரின் சதவிகிதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 1947-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டதும், வங்கதேசம் உருவாகியதும் மக்கள் தெற்கு ஆசிய நாடுகளுக்கும் வேறு பல வெளிநாடுகளுக்கும்இடம் பெயர முக்கியமான காரணமாகும் என உலக அளவில் குடிபெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு (ஐஎம்ஓ) தனது அறிக்கையில்தெரிவிததுள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
1930-ம் ஆண்டு வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கிய குடிபெயர்வு 1973-ம் ஆண்டுதான் அதிகரித்தது.
குடிபெயர்வோரில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.
குடிபெயர்பவர்கள் தெற்கு ஆசிய நாடுகளில் உள்ளவர்கள்தான். இவர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். வேலை வாய்ப்புக்கானசூழ்நிலைகள் அதிகமாக இருப்பதும், உயர் கல்விக்கான வாய்ப்புகள் இருப்பதும், வன்முறை மற்றும் விபச்சாரத்திலிருந்து தப்பிப்பதற்காகவுமே மக்கள்குடிபெயர்பிற்கு முக்கியமான காரணமாகும்.
பெரும்பாலான மக்கள் கோஸ்டா ரிகா, கோட் டி ஐவரி, ஜெர்மனி, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 10 மில்லியன் மக்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா உட்பட உலகின் பலவேறு பாகங்களிலும குடியேறியுள்ளனர்.
1995-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை உலக மக்கள் தொகை ஆண்டு தோறும் 1.7 சதவிகதம் என்ற அளவில் அதிகரித்துவருகிறது. ஆனால்உலக அளவில் குடிபெயர்வோரின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 2.59 சதவிகிதம் அளவில் அதிகரித்து வருகிறது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications