எங்கள் ஆதரவில்லாமல் ஆட்சியா? மூப்பனார்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இனிமேல் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவின்றி யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று மூப்பனார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
குமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாநாடு கருங்கல்லில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மூப்பனார்பேசியதாவது:
நான் முதலில் திமுகவுக்காக உங்களிடம் ஓட்டுக் கேட்டேன். நல்ல ஆட்சி தருவார்கள் என்று கருதினேன். அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டதால்சண்டை போடும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் தமாகா ஆதரவின்றி யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே தமிழகத்தில் அடுத்து அமையும் ஆட்சியில் தமாகாகட்சியின் பங்கு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார் மூப்பனார்.
மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.












Click it and Unblock the Notifications