மசூதி மீது தாக்குதல்: திருநெல்வேலியில் இன்று பந்த்

Subscribe to Oneindia Tamil

பாளையங்கோட்டை:

பாளையங்கோட்டையில் மசூதியில் கொலை நடந்ததையடுத்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை)பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள கிரஸண்ட் நகர் மஜீத் மரியம் அல்பீல் பள்ளிவாசல் மீது சனிக்கிழமைநள்ளிரவில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் பள்ளிவாசலுக்குள் நுழைந்த அந்தக் கும்பல்உள்ளே இருந்தவர்களை கத்தி, அரிவாள்களால் தாக்கியது. இதில் தப்லீக் ஜாமாத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர்கொல்லப்பட்டார்.

இவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இவரது கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையி திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் பல இடங்களில் கண்டன பேரணிகள் நடந்தன. தென்காசியில் நடந்த ஊர்வலத்தில் அதிக அளவிலானபெண்களும் கலந்து கொண்டனர்.

பஸ்கள் மீது கல்வீச்சு:

பள்ளிவாசல் தாக்கப்பட்டதையடுத்து தென்காசியில் 2 அரசுப் பேருந்துகள் மீதும். சங்கரன்கோவிலில் ஒரு அரசு பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் 3 பஸ்களும் சேதமடைந்தன. அந்த மாவட்டம் முழுவதுமே பதட்டம் நிலவுவதால் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

மசூதி மீது தாக்குதல் குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக தென் மண்டல காவல்துறைத் தலைவர் விபாகர் சர்மாதிருநெல்வேலிக்கு விரைந்தார். அங்கேயே முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.

4 போலீஸ் படைகள்:

பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க 4 சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பகைகாரணமாக இந்தக் கொலையும் தாக்குதலும் நடந்ததால் அல்லது வேறு காரணம் தான் தாக்குதலுக்கு வித்திட்டதா என்பதை இந்தப்படையினர் விசாரித்து கொலையாளிகளைப் பிடிப்பர்.

அமைச்சர் ரகுமான்கான்:

மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் அமைச்சர் ரகுமான் கானை முதல்வர் கருணாநிதிபாளையம்கோட்டைக்கு அனுப்பினார். பள்ளி வாசலை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் இஸ்லாமிய தலைவர்களுடனும் பேச்சுநடத்தினார்.

கொலையாளிகள் நிச்சயம் பிடிக்கப்படுவார்கள் என உறுதியளித்த அவர், கொலையான அப்துல் ரஷீதின் குடும்பத்தினருக்குஉதவித் தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க முதல்வர் கருணாநிதியுடன் பேசுவேன் என்றார்.மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பந்த்:

பள்ளிவாசல் மீதான தாக்குதல், கொலை ஆகியவற்றைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பந்த் நடத்த பலமுஸ்லீம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்படும் என முஸ்லீம் முன்னேற்றக் கழகம்கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+