வேலை நிறுத்தம்: இந்தியா முழுவதும் குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான தபால்கள்
டெல்லி:
ஊதிய உயர்வு, ஐந்தாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தபால் ஊழியர்கள் நடத்தி வரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் திங்கள்கிழமை ஏழாவது நாளை எட்டியது.
அவர்கள் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணாக தபால்கள் மலை போல் தேங்கிக் கிடக்கின்றன.தபால் சேவைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தங்கள் வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கத் தலவைர்கள் சிலர் கூறியதாவது:
மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். நாங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகஇருக்கிறோம். ஆனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அரசின் அவைப்பிற்காக நாங்கள்காத்திருக்கிறோம் என கூறினர்.
இதுவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் அரசு ஈடுபடுவதற்கான எந்த ஏற்பாடும் அரசு தரப்பில்செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications