யாழ்ப்பாணத்தில் 13 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொலை
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 13 விடுதலைப்புலிகள் திங்கள்கிழமைகொல்லப்பட்டனர்.
அம்ப்பாரா பகுதியிலிருந்து மூன்று கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
யாழப்பாணம் பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அப்போது 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மேலும்பலர் காயமடைந்தனர்.
நுணவில்லின் மேற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், புலிகளுக்கும் இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்தார்.
இதே போல் முகமலை பகுதியில் இரண்டு விடுதலைப்புலிகளை, ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கைலை, மலாகம் பகுதிகளில் நடந்த தாக்குதலில் 3புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
அம்ப்பாரா பகுதியில் 3 கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இந்த வெடிகுண்டு சில முக்கிய அரசியல் பிரமுகரைக் குறி வைத்துத்தாக்குவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications