கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை:
அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு வழங்கப்படுவது போல் கோயில்களில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான திட்டத்தை தீட்டி ஓராண்டிற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிெல்லை மாவட்டம், அம்பாசத்திரம் திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 98-ம் ஆண்டு திருக்கோயில்களில் பணிபுரியும் குமாஸ்தாக்கள்,சமையல் பணியாளர்கள் ஆகியோருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சம்பத், அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு வழங்கப்படுவது போலவேதிருக்கோயில்களில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று இந்து அறநிலத்துறைக்கு உத்திரவிட்டார்.
இந்த உத்தரவை ஓராண்டிற்குள் திட்டம் ஒன்றைத் தீட்டி செயல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications