வீரப்பனைப் பிடிக்க நவீன ஆயுதங்கள் ஈரோடு வருகை
ஈரோடு:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்கள் ஈரோடு வந்து சேர்ந்தன. 158 பெட்டிகளில்கையெறி குண்டு, கண்ணி வெடிகளை அகற்றும் கருவி, ஏ.கே 47 ரகத் துப்பாக்கி உட்பட நவீன ஆயுதங்கள் இந்தப்பெட்டியில் வந்து சேர்ந்தன.
கோவை அருகே சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வந்திறங்குவர்என எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கியும், கையுமாக:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியாக எல்லைப் பாதுகாப்பு படை காட்டுக்குள் இறங்கவுள்ளது. இந்தப்படையினர் தீவிரமாக "வீரப்பனைப் பிடிக்க துப்பாக்கியும் கையுமாக வேட்டையைத் துவங்குகின்றனர்.
இதற்கு முதற்கட்டமாக எல்லைப் பாதுகாப்பு படையினர் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் ஈரோட்டிற்கு இன்று வந்துசேர்ந்தன. இந்த ஆயுதங்கள் 158 மரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, ரயிலில் திங்கள்கிழமை அதிகாலை வந்துஇறங்கியது.
கேரள எக்ஸ்பிரசில் வந்திறங்கிய இந்த ஆயுதங்கள் விரைவில் லாரியில் ஏற்றப்பட்டு பண்ணாரி முகாமிற்குக்கொண்டு செல்லப்படும்.
இந்த ஆயுதங்கள் டில்லியிலிருந்து கடந்த டிசம்பர் 9ம் தேதி ரயிலில் ஏற்றப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்துள்ளது.இதில் கையெறி குண்டுகள், ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், இருட்டிலும் எதிரியை அடையாளம்கண்டு தாக்கக் கூடிய வகையில் பைனாகுலர் கருவிகள், ஆகியவை இதில் அடங்கும்.
அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை:
இந்நிலையில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையை நீலகிரி மலைப் பகுதியில் மேற் கொண்டுள்ளனர்.மேலும், எஸ். பி சைலேந்திரபாபு, அசோக்குமார் தாஸ், கர்நாடக அதிரடிப்படை டி.ஐ.ஜி ஹர்ஷவர்த்தன ராஜூ,இன்ஸ்பெக்டர் மோகன் நிவாஸ் ஆகியோர் இன்றும் ஆலோசனை மேற் கொண்டனர்.
இந்நிலையில் கோவைக்கு மத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் தனி விமானத்தில் சூலூர்விமானப் படைத் தளத்தில் வந்திறங்கவுள்ளனர். விமானத்தில் வரும் அவர்கள், பண்ணாரிக் காட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவர்.
இவர்களை வழி நடத்திச் செல்லும் பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் விஜயகுமார் ஏற்கனவேரயிலில் வந்து கோவையில் முகாமிட்டுள்ளார்.
விமானத்தில் 300க்கும் குறையாத வீரர்கள் முதற்கட்டமாக வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சூலூர் விமானப் படைத் தளம் முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.