உலக செஸ் போட்டி: ஆனந்த் அரை இறுதிக்குத் தகுதி
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலகசெஸ் சாம்பியன் போட்டி டெல்லியில் நடை பெற்று வருகிறது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தற்போதைய சாம்பியனான, ரஷ்யாவைச் சேர்ந்தஅலெக்சாண்டர் காஃளிப் மேனுடன் மோதினார்.
டைபிரேக்கர்:
திங்கள்கிழமை 2 போட்டிகள் நடந்தன. இரண்டுமே டிராவில் முடிவடைந்தன. இதனால் டை பிரேக்கர் ஏற்பட்டது. விரைவு செஸ் போட்டி மூலம்வெற்றி தோல்வியை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் இதுவும் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 15 நிமிடத்தில் விளையாடி முடிக்கக் கூடிய பிளிட்ஸ் முறையில் போட்டி தொடர்ந்தது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆனந்த் 15 நிமிடத்திற்குள்வென்றார்.
இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.












Click it and Unblock the Notifications