படேல் மறைவு: கருணாநிதி அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடக முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான ஜே.எச்.படேல் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல்தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலின் மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
படேல் எனது நல்ல நண்பரும் கூட. அவர் காவிரி நீர் பங்கீடு பிரச்சனை, வீரப்பன் விவகாரம் ஆகிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எவ்வுளவு ஆர்வம்காட்டினார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவர் விரைவில் குணம்பெற்று நலமுடன்வீடு திரும்புவார் என்று நினைத்தேன். ஆனால் அவரது மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications