ஈழவேந்தன் நாடுகடத்தல்: நெடுமாறன் போராட்டம்
சென்னை:
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 15-ம் தேதி சென்னையில் பழ.நெடுமாறன் ஆர்பாட்டம்நடத்துகிறார்.
தமிழீழ விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஈழவேந்தன். இலங்கைத் தமிழரான அவர்தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வசித்து வந்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் அவர் இருந்தார். சமீபத்தில் திடீரென அவர்இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
வயதான நிலையில் இருந்த ஈழவேந்தனை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியதற்கு பல்வேறுதமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ் சான்றோர் பேரவை கண்டன கூட்டம் நடத்தியது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளரான பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கைவருமாறு:
கடந்த இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த தமிழீழவிடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ஈழவேந்தன் திடீர் என இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதுதமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஒரு நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்து இருப்பவரை அவரது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சும்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று ஜெனீவா உடன்பாடு கூறுகிறது. அதற்கு முரணாக அவரை இந்திய அரசு நாடுகடத்தியிருப்பது இரக்கமற்ற கொடுமையான செயலாகும்.
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதற்குத் தமிழர்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 15-ம் தேதிகாலை 11 மணிக்கு குடி நுழைவு அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சாஸ்திரிபவணுக்கு முன்னால் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அத்தனை அமைப்புகளும் மற்றுள்ளதமிழ் அமைப்புகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க திரண்டு வருமாறு வேண்டுகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.