பாண்டிச்சேரி அரசை கலைக்கச் சொல்கிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
அமைச்சர் பதவியில் இருந்து கண்ணனை நீக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்த புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர்ராமதாஸ் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுவையில் இயங்கும் காங்கிரஸ் அரசு நியாயமான குற்றச்சாட்டுக்களை கூட பொறுக்காமல் ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் வீட்டுக்கு அனுப்பும்போக்கு கண்டிக்கத்தக்கது. கண்ணன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதை தீர விசாரிக்காமல் அவர் மீது காழ்புணர்ச்சியோடுஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைச்சரை பதவியில் நீடிக்க விட்டுவிட்டு, குற்றம்சாட்டிய அமைச்சரை பதவியை விட்டு நீக்கியுள்ளது. இதுசண்முகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தைக்காட்டுகிறது.
பல தடவை காங்கிரஸ் மற்றும் சண்முகத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்ட கண்ணன் இப்பொழுதாவது சண்முகத்தைப் புரிந்து கொண்டு இருப்பார் என்றுநினைக்கிறேன். கண்ணனை நீக்கிய பிறகு சண்முகம் அரசு நீடிக்க எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
சண்முகம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையென்றால் கவர்னர் இந்தவிஷயத்தில் தலையிட்டு ஜனநாயக விரோத அரசை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
இல்லையெனில் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பொய்த்து விடும். இந்த அரசு கலைக்கப்படவில்லை என்றால் விஷயத்தைஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லவும் பா.ம.க. தயங்காது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.