கோயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
கோயில் ஊழியர்களின் ஏழு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்தத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருக்கோயில் பணியாளர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, சேம நல நிதி போன்றவற்றைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது குறித்து, முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின் படி, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர், இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை ஆணையர் ஆகியோர் திருக்கோயில் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில், விருப்ப ஓய்வு, மருத்துவ விடுப்பு, சிறப்பு ஊதியம் போன்ற உள்ளிட்ட 7 கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், மற்ற கோரிக்கைகள் அரசால்ஆய்வு செய்யப்படும் என்றும் விளக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசின் முடிவினை ஏற்று, திருக்கோவில் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு தங்களதுபோராட்டத் திட்டத்தை கைவிட்டு, திருக்கோவில் பணிகளை வழக்கம் போல் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications