இந்தியாவிலேயே கண்புரையற்ற மாவட்டம் கோவை
கோவை:
இந்தியாவிலேயே முதிர்ந்த கண்புரை அற்ற மாவட்டமாக கோவைக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளதுஎன இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளத்தில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசியதாவது:
தமிழக அரசு தான் மக்கள் நலத் திட்டங்களையும், சுகாதாரத் திட்டங்களையும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.வருன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்துள்ளது. மேலும்கண்ணொளித் திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கண்ணொளித் திட்டத்தில் 98 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5ஆயிரத்து 800 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதனால் இந்தியாவிலேயே முதிர்ந்த கண்புரையற்றமாவட்டமாக கோவை திகழ்கிறது.
கிராமங்களைத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் ஒரே அரசாகத் தமிழ அரசு விளங்குகிறது. தமிழகம் முழுவதும்அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு இயந்திரம் முடுக்கிவிடபட்டுள்ளது என்றார்.