கோவை டாக்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது
கோவை:
கோவையில் பயிற்சி டாக்டரைத் தாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைதுசெய்தனர். இதையடுத்து திடீர் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபசானது
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக முன்னாள்அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,செல்வராஜை கைது செய்யக் கோரி டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தானம் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வராஜ், நீதிமன்றத்தில் சரணடைய காரில் வந்து கொண்டிருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அவரது காரை மடக்கிப் பிடித்து செல்வராஜைபோலீசார் கைது செய்தனர்.
மேலும், சம்பவத்தின் போது உடனிருந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜா தங்கவேலு என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டதையடுத்து டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர்.
கோவை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும்டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இருவர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவர்களும் ஸ்டிரைக்கை கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications