ஈழவேந்தன் நாடு கடத்தல்: தடையை மீறி ஊர்வலம்
சென்னை:
ஈழவேந்தன் நாடு கடத்தலைக் கண்டித்து 15-ம் தேதி தடையை மீறி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும்,தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளருமான பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தமிழர் தலைவர் ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் நாங்கள் நடத்தவிருந்தஆர்பாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பாதாகும்.
பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் வெளியேற வேண்டும் எனசென்னையில் உள்ள முதன்மை குடியேற்ற அலுவலரான அஷிஸ் பெங்கரே என்பவர் முன்னறிவிப்பினைக் கொடுத்த பொழுது மத்திய உள்துறைஅமைச்சரகம் தலையிட்டு அதை நிறுத்தி வைத்தது.
மேற்கண்ட அதிகாரி தமிழர் விரோதப் போக்குடையவர், அலுவல் நிமித்தம் அவரைச் சந்திக்கும் ஈழத் தமிழர்களிடம் தேவையில்லாமல் கடுமையாகநடந்து கொள்பவர். தகாத வார்த்தைகளைப் பேசுவார்.
அதிகாலை ஐந்து மணிக்கு ஈழவேந்தனை எழுப்பி காரணம் எதுவும் கூறாமலும் மாற்றுடை எடுக்கக் கூட அனுமதிக்காமலும் இரகசியமாகவிமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று நாடு கடத்தியுள்ளார். ஈழவேந்தனுக்கு எத்தகைய ஆவணமும் தரப்படவில்லை. இது அப்பட்டமான சட்டமீறல்மட்டுமல்ல மனித உரிமை மீறலுமாகும்.
1986-ம் வருடம் ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோரை இந்திய அரசு நாடு கடத்தியபோது கலைஞர் கருணாநிதிதலைமையில் டெசோ அமைப்பு சென்னையில் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தியது. அதற்குப்பின் மத்திய அரசு பணிந்தது. மூவரும் திரும்பவும் இந்தியா வரஅனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
எனவே காவல்துறையின் நியாமற்ற தடையை மீறி டிசம்பர் 15-ம் தேதியன்று காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளசாஸ்திரிபவனுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
தமிழர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் படி வேண்டுகிறேன். அமைதியையும் கட்டுப்பாட்டையும் காக்கும் படி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications