கங்குலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை
டெல்லி:
அம்பயர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணிகேப்டன் கங்குலி, ஒரு போட்டியில் விளையாடக் கூடாது என தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
திங்கள்கிழமை ஜிம்பாப்வேயுடன் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது அம்பயர் மீது அதிருப்தி அடைந்த கங்குலி, விக்கெட் கீப்பர் விஜய் தாஹியாபிடித்த ஒரு கேட்ச்சுக்கு அவுட் கொடுக்க மறுத்த அம்பயர்களின் தீர்ப்புக்கு எதிர்ப்புதெரிவித்தார்.
விஜய் தாஹியாவும் தான் பிடித்த காட்சுக்கு அம்பயர் அவுட் தரவில்லை என எதிர்ப்புதெரிவித்தார்.
இதையடுத்து போட்டி முடிந்ததும் அம்பயர்கள் சாத்தேயும், தேவேந்தர் சர்மாவும்கங்குலியும், தாஹியாவும் முறை கேடாக நடந்து கொண்டதாக சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு ரெப்ரீ பேரி ஜார்மேனிடம் முறையிட்டனர்.
கங்குலியும், தாஹியாவும் ஒழுங்கு மீறி நடந்திருப்பதாக கூறிய ஜார்மேன், கங்குலிக்குஒரு போட்டியில் விளையாட தடை விதித்தார். இருப்பினும், தாஹியாவுக்கு எந்ததடையும் விதிக்கப்படவில்லை.
இதன் காரணமாக வியாழக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற இருக்கும்இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கங்குலி விளையாட முடியாது.












Click it and Unblock the Notifications