இந்திய ஹோட்டல் துறையில் 700 மில்லியன் டாலர் முதலீடுக்கு வாய்ப்பு
டெல்லி:
இந்தியாவில் வரும் 2004 ம் வருடத்திற்குள் ஹோட்டல் துறையில் 700 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்என்று சர்வதேச அளவில் ஹோட்டல் தொழிலில் பிரபலமான ஜோன்ஸ் லாங் லசாலே ஹோட்டல் மற்றும் ரியல்எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லசாலே ஜோன்ஸ் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஹோலன்ட் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள ஹோட்டல்களில் தரம் தற்போது மிகவும் மேம்பாடடைந்து வருகிறது. இதனால் முதலீடும்அதிகமாக இருக்கும் என்று நம்பலாம். இந்த முதலீடு வரும் 2004-க்குள் 700 மில்லியன் டாலர்களைத் தாண்டும்என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 5 நட்சத்திர டீலக்ஸ் ஹோட்டல்களில், அடுத்த 4 வருடத்திற்குள் 4,000க்கும் மேற்பட்ட அறைகள் அமைக்கப்படும். ஏனெனில் தற்போது ஹோட்டல் தொழில் முதலீடு நல்ல லாபம் தரும்தொழிலாகும்.
இந்தியாவில் மும்பை, டெல்லி, கோவா, ஜெயப்பூர் மற்றும் சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களுக்குஅதிக மவுசு உள்ளது.
ஏற்கனவே இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் ஹோட்டல்தொழிலில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். மேலும் தற்போது இந்தியாவில் டீலக்ஸ் ஹோட்டல்களில் 7,800அறைகள் அதிகமாகக் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டிடப்பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
மும்பை, சென்னை மற்றும் டெல்லியில் உள்ள டீலக்ஸ் ஹோட்டல்களில் இன்னும் அதிகமான அறைகள்கட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
மேலும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் சென்னை, மும்பைநகரங்களில் டீலக்ஸ் ஹோட்டல்களில் அதிக அளவு அறைகள் தேவைப்படுகின்றன. இதனால் ஹோட்டல்தொழிலில் இந்திய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களின் முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.