வாஜ்பாய் பேச்சு துரதிர்ஷ்டவசமானது .. கூறுகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் குறித்து பிரதமர் பேசிய பேச்சு துரதிர்ஷ்டவசமானது எனஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் சில வாரங்கள் ஓய்வெடுத்த பின் தன் தோழி சசிகலாவுடன்செவ்வாய்கிழமை சென்னை திரும்பினார் ஜெயலலிதா.
சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.பேட்டியில் அவர் கூறியதாவது:
அயோத்தி பிரச்சனையில் எதிர்க்கட்சிளின் கருத்துதான் எங்களின் கருத்தும். இதில்எந்த விதமான மாற்றமும் கிடையாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து வாஜ்பாய் கூறியுள்ள கருத்துதேவையற்றது. துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications