வந்தது எல்லைப் பாதுகாப்புப் படையின் 2-வது பிரிவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
எல்லைப் பாதுகாப்பு படையின் மற்றொரு படைப் பிரிவு கோவை வந்து சேர்ந்தது. இந்த பிரிவும் பண்ணாரிமுகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் வந்து சேர்கின்றனர்.ஆயிரம் படை வீரர்களில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துள்ளனர்.
முதல் கட்டமாக 184 பேர் சூலூர் விமானப் படை விமானத்தளத்தில் வந்து இறங்கினர். இவர்கள் பண்ணாரிமுகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இரண்டாவது பிரிவாக 128 வீரர்கள் தனி விமானத்தில்டிசம்பர் 13ம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தனர்.
இவர்களை அதிரடிப்படை வாகனங்கள் அழைத்துச் சென்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துசேர்ந்துள்ளனர். அடுத்த கட்டமாக வியாழக்கிழமையும் விமானத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துசேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications