For Daily Alerts
Just In
56 இலங்கை மீனவர்களை விடுவிக்கிறது இந்தியா
கொழும்பு:
இந்தியா வசம் உள்ள 56 இலங்கை மீனவர்களையும் விடுவிப்பதாக இந்தியாகூறியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைநகர் கொழும்பில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 56 மீனவர்கள்தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்ரகள். இவர்கள்சனிக்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த மீனவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் 12பேர் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் ஜலசந்தியை கடந்ததற்காககைது செய்யப்பட்டனர்.
இப்போது இவர்களை விடுவிப்பதாக இந்திய அரது கூறியுள்ளது எனகூறப்பட்டிருக்கிறது.
Comments
Story first published: Wednesday, December 13, 2000, 5:30 [IST]