லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்து 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

சர்க்கரை ஏற்றிக் கொண்டு வந்த லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். சுமார் 25 பேர்காயமடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

தர்மபுரி அருகே சிங்காரம்பேட்டை என்ற இடத்தில் புதன்கிழமை பிற்பகலில் இந்த கோரமான விபத்து நடந்தது.

அந்த பஸ் ஆந்திரா பதிவு எண்ணைக் கொண்டது. பஸ்சில் இருந்தவர்கள் கர்நாடகத்தில் தும்கூச்ை சேர்ந்தவர்கள். அவர்கள்திருவண்ணாமலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தவிபததில் சிக்கினர்.

செங்கம் நகரிலிருந்து கரும்பு ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த லாரியும் இந்த பஸ்சும்சிங்காரம்பேட்டை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்இந்த விபத்து நடந்தது.

ஆனால், இரு வாகனங்களும் மோதிக் கொண்ட பின் பஸ் ஏரியில் கவிழ்ந்தது. அந்த பஸ்சில் எத்தனை பேர் இருந்தார்கள் எனத்தெரியவில்லை. இதுவரை 11 உடல்களை போலீசார் ஏரியிலிருந்து மீட்டுள்ளனர். மேலும் உடல்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனத்தெரிகிறது. குறைந்தபட்சம் 17 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பஸ்ஸை ஏரியிலிருந்து வெளியே எடுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தர்மபுரியைச் சேர்ந்த அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியாளர், உயர் அதிகாரிகள் சம்பல இடத்துக்கு விரைந்து மீட்புப்பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+