தனியார் பண்ணையில் 10 முதலைகள் சாவு
கண்ணூ
தனியாருக்குச் சொந்தமான பண்ணையில், கொடுமை இழைக்கப்படுவதாகக் கூறி வேறு பண்ணைக்குவனத்துறையினர் எடுத்துச் சென்றபோது 10 முதலைகள் இறந்து போயின. மேலும் ஒரு வெண் அலகு நாரையும்இறந்தது.
கேரளாவில் பாரசினிக்கடவு என்ற இடத்தில் ராகவன் என்பவர் ஒரு பண்ணை வைத்து நடத்தி வந்தார். இந்தப்பண்ணையில் பாம்புகள் உள்பட, பல்வேறு பறவைகள், முதலைகள் போன்ற விலங்களும் வளர்க்கப்பட்டு வந்தன.
இந்தப் பண்ணையில் உள்ள விலங்குகள் போதுமான உணவின்றி கொடுமைப்படுத்தப்படுவதாகவனத்துறையினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அனைத்து விலங்குகளையும் இடமாற்றம் செய்து, இப்பண்ணையை காலி செய்ய கேரள வனத் துறைமுடிவு செய்தது.
இந்தப் பண்ணையில் இருந்த தலைகளை ஒரு சாக்கில் கட்டி அருகில் இருந்த வனத்துறைக்குச் சொந்தமானகுளத்தில் விட எடுத்துச் சென்றனர். அங்கு சென்ற முதலைகள் அனைத்தும் இறந்து போயின. மேலும் வெண் அலகுநாரை ஒன்றும் இறந்து போனது.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி மெகர் சிங் கூறுகையில், முதலைகளைப் பிடிக்கும்போது ஏற்பட்ட காயத்தால்அவை இறக்கவில்லை. எடுத்துச் செல்லும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இவை இறந்திருக்கலாம் என்றார்.
வனத் துறையினர் இழைத்த கொடுமையால் தான் இந்த முதலைகள் இறந்து போய் விட்டதாக ராகவன்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் பண்ணையில் உள்ள பாம்புகளை இட மாற்றம் செய்யக் கூடாது எனக் கோரி மனுச் செய்தார். நீதிமன்றம்இதனை விசாரணை செய்து , விலங்குகளை இடமாற்றம் செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications