"வீரப்பனை பிடிக்காமல் விடமாட்டோம்
கோவை:
வீரப்பனை எப்போது பிடிக்க முடியும் என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால், காவல் துறை மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு நல்ல முடிவுகிடைக்கும் என கோவையில் டி.ஜி.பி., ராஜகோபாலன் தெரிவித்தார்.
காட்டு "நரி வீரப்பனைப் பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம்பேசிய டி.ஜி.பி. ராஜகோபலன் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆலோசனைக்குப் பிறகு கர்நாடக அதிரடிப்படை, தமிழ்நாடு அதிரடிப்படை, மற்றும் எல்லைப்பாதுகாப்பு படை ஆகியவற்றின் கூட்டுப் படைத் தலைவராக ஐ.ஜி., பாலச்சந்திரன் செயல்படுவார்.
நாங்கள் வகுத்துள்ள வியூகம் குறித்து எதுவும் சொல்ல இயலாது. இந்த தேடுதல் வேட்டையின்போது நல்ல முடிவு ஏற்படும் என்பதை மட்டும்உறுதியாகக் கூற முடியும்.
வீரப்பன் இலங்கைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுவது எவ்விதத்திலும் சரியல்ல. அவ்வாறு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில்கடலோரக் காவல் படையின் காவல் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை அதிரடிப்படையின் உதவிக்கு வந்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தாமாக தனித்து இயங்க மாட்டார்கள்.அதிரடிப்படைதான் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபடவுள்ளது.
அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமைப் பொறுப்பை ஐ.ஜி பாலச்சந்திரன் ஏற்றுள்ளார். உதவி கமாண்டராக கர்நாடகஅதிரடிப்படையின் தலைவர் டி. ஐ.ஜி., ஹர்ஷவர்த்தன ராஜூ செயல்படுவார்.
தற்போது திட்டமிடுதல், வியூகம் அமைத்தல், நுண்ணறிவு ஆகிய 3 முக்கிய கட்டங்களைக் கொண்டு வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபடுகிறோம்.ஹெலிகாப்டரின் உதவியுடன் ரோந்து பணியை மேற்கொள்ள முடியும்.
கோவையில் பஸ் டெப்போ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட 5 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விட்டனர். குற்றவாளிகளைவிரைவில் பிடிப்போம். மாநிலத்தில் மற்றொரு இடத்தில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக இது நடந்திருக்கலாம்.
கோவை எம். பி., ராதாகிருஷ்ணன் மீது 9 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து இப்போது எதுவும் தெரியாது. தவறு செய்பவர்கள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.