For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தபால் ஊழியர்களை பேச்சுக்கு அழைக்கிறது மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தபால்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 நாட்களாக நடந்து வருகிறது.அவர்களை பேச்சு வார்த்கைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.

ஊதிய உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தபால்துறைஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தபால் பணிகள்அனைத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது மத்திய அரசு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தபால்துறை ஊழியர்களைபேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாரதியதபால்துறை தொழிற்சங்க செயலாளர் யாதவ் கூறியதாவது:

எங்கள் கோரிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தைநடத்த வருமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும்வரை வேலைநிறுத்தம் தொடரும்.எங்கள் கோரிக்கைகள் குறித்து தபால்துறை செயலாளர் சாமுடன் பேச்சு வார்த்தைநடத்தவுள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தொழிற்சங்க கூட்டமைப்புமுடிவு செய்யும் என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X