உலக ஆடவர் இரட்டையர் டென்னிஸ் .. பெங்களூரில் துவங்குகிறது
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி பெங்களூரில் புதன்கிழமை துவங்குகிறது
உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் புதன்கிழமைதுவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிஜோடி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் ஆகும். இந்தபோட்டியில் 8 அணிகள் பங்கு பெறுகின்றன. டென்னிசில் தலை சிறந்த இரட்டையர்ஜோடியாக கருதப்படும் ஆஸ்திரிலியாவின் டாட் வுட்பிரிட்ஜ், மார்க் வுட்போர்டுஜோடி இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பயஸ், பூபதி ஜோடிக்கு வெற்றி வாயப்பு அதிகரித்துள்ளது. மேலும், போட்டிஇந்தியாவில் நடப்பதால், பயஸ், பூபதிக்கு சாதமானதாக அமையும் என்பதும்குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு, 1999-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பயஸ் , பூபதி ஜோடிஇறுதிப் போட்டி வரை தகுதி பெற்றது. 1999ம் ஆண்டு உலகின் தலை சிறந்தஇரட்டையர் பிரிவு ஜோடியாக பயஸ், பூபதி ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications